Categories: இந்தியா

மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் BSF ஜவான் ஒருவர் வீரமரணம் அடைந்தார். 

மணிப்பூர் மாநிலம் செரோவில் எல்லைப் பாதுகாப்புப் (பிஎஸ்எஃப்) படையினருக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிசூடு தாக்குதல் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிசூடு தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இரண்டு அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் காயமடைந்தனர்.

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த BSF ஜவான் Ct/GD ரஞ்சித் யாதவ், கக்ச்சிங்கில் உள்ள ஜிவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். காயமடைந்த இரண்டு அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி பழங்குடியினர் சமூகத்தினர் இடையே கலவரம் தொடர்ந்து நீடித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் மாநிலம் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

இந்த சமயத்தில் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர  இணையதள சேவை துண்டிப்பு ஜூன் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மே 3 வரை இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 10-ம் தேதி வரை நீட்டிக்கட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

55 minutes ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

3 hours ago

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

3 hours ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

4 hours ago

இன்று இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…

4 hours ago