மூத்த பத்திரிக்கையாளர் ராஜ்குமார் கேஸ்வானி கொரோனாவால் மரணம்..!

Published by
Sharmi

போபால் விஷவாயு சம்பவம் குறித்து முன்பே எச்சரித்த மூத்த பத்திரிகையாளர் ராஜ்குமார் கேஸ்வானி கொரோனாவால் உயிரிழந்தார்.

ராஜ்குமார் கேஸ்வானி நியூயார்க் டைம்ஸ், என்.டி.டி.வி., டைனிக் பாஸ்கர், தி இல்லஸ்ட்ராடெட் வீக்லி ஆப் இந்தியா, ஞாயிறு, இந்தியா டுடே மற்றும் தி வீக் போன்ற முக்கிய பத்திரிகை நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ளார். உலகின் மிக மோசமான போபால் விஷவாயு கசிவு 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2-3 ஆம் தேதிகளில் இரவில் நடந்தது. ஆனால், இந்த சம்பவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ராஜ்குமார் கேஸ்வானி எச்சரித்திருந்தார். இதில் பல பேர் உயிரிழந்தனர்.

தற்போது, ராஜ்குமாரின் மகன் ராணக் வெள்ளிக்கிழமை அன்று கேஸ்வானி கொரோனாவால் இறந்ததாக தெரிவித்தார். 72 வயதான கேஸ்வானி கொரோனாத் தொற்றால் ஏப்ரல் 8ஆம் தேதி பாதிக்கப்பட்டார். அதன் பிறகு இவர் ஏப்ரல் 20 ஆம் தேதி குணமடைந்துள்ளார். அதன் பிறகு, ஏப்ரல் கடைசி வாரத்தில் இவர் நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில், இவர் கொரோனா பாதிப்பால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இறந்துள்ளார்.

இதற்கு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அவரது இரங்கலை தெரிவித்தார். அதில் அவர், “போபால் எரிவாயு சம்பவத்திற்கு முன்னரே அதன் பாதுகாப்பு குறைபாடுகளை பற்றி கவனிக்க வேண்டும் என்பதை குறித்து கேஸ்வானி திறம்பட செயல்பட்டார்” என்று கூறியுள்ளார்.

மேலும், மூத்த பத்திரிக்கையாளர் தீபக் திவாரி, “டிசம்பர் 2-3, 1984 யில் நடந்த போபால் எரிவாயு சம்பவம் குறித்து ராஜ்குமார் கேஸ்வானி முன்பே எச்சரித்தார்” என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

59 minutes ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

1 hour ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

1 hour ago

ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…

1 hour ago

“இந்தியரின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்” – ஸ்பேஸ் எக்ஸ்.!

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

3 hours ago

Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!

மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…

3 hours ago