Janagama [File Image]
தெலுங்கானா : ஜனகாம – பசரமட்லா கிராமத்தைச் சேர்ந்த நிம்மல நரசிங்கராவ் என்ற விவசாயி தனது நிலத்தை மற்றவர்களுக்கு வழங்கியதாக கூறி ஆட்சியர் கட்டிடத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிருடன் இருந்தும் இறந்தது போல் தங்கள் நிலம் மற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வேதனை தெரிவித்த நிம்மல நரசிங்கராவ் வேகமாக கையில் ஒரு பூச்சி மருந்து பாட்டிலுடன் ஆட்சியர் கட்டிடத்தில் ஏறி குடித்து கொண்டு இருந்தார். கீழே இருந்த அதிகாரிகள் மற்றும் மக்கள் சிலர் கீழே இறங்குங்கள்…கீழே இறங்குங்கள் என்பது போல கூறினார்கள்.
ஆனால், நிம்மல நரசிங்கராவ் கேட்காமல் கையில் வைத்து இருந்த பூச்சி மருந்தை குடித்தார். இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவலை கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மேலே சென்று நிம்மல நரசிங்கராவை பிடித்து கீழே கொண்டு சென்றார்கள்.
பின் பூச்சி மருந்தை அவர் அதிகமாக குடித்த காரணத்தால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று போலீசார் காரில் ஏற்றி சிகிச்சைக்கு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்க முயற்சி செய்தார்கள். ஆனால், தன்னுடைய நிலம் போன விஷயத்தில் நொந்து போன நிம்மல நரசிங்கராவ் காரில் எற மறுத்துள்ளார்.
பிறகு காவலர்கள் அவரை பிடித்து காருக்குள் தூக்கி வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . தனது நிலத்தை மற்றவர்களுக்கு வழங்கியதாக கூறி ஆட்சியர் கட்டிடத்தில் ஏறி விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…