பதறிய வங்கி நிர்வாகம்.! ஏடிஎம்மில் ரூ.100-க்கு பதிலாக ரூ.500 நோட்டுகள் .!

Published by
murugan
  • மடிக்கேரி பகுதியில் கனரா வங்கி ஏடிஎம் உள்ளது. அந்த ஏடிஎம்மில்  ரூ.100-க்கு பதிலாக ரூ.500 வந்துள்ளது.
  • பின்னர் ஏடிஎம்மில் பணம் எடுத்துச் சென்ற வாடிக்கையாளர் தொடர்பு கொண்டு வங்கி நிர்வாகம் பணத்தை திருப்பி வாங்கி உள்ளது.

கர்நாடக மாநிலம் கொடகு மாவட்டத்தில் உள்ள மடிக்கேரி பகுதியில் கனரா வங்கி ஏடிஎம் உள்ளது. அந்த ஏடிஎம்மில்  ரூ.100-க்கு பதிலாக ரூ.500 வந்துள்ளது. இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவி அப்பகுதியில் உள்ள மக்கள் அவசர அவசரமாக பணத்தை எடுத்துச் சென்றனர். ஆனால் இந்த செய்தி வங்கி அதிகாரிகளுக்கு தெரிவதற்குள் 1.7 லட்சம் பணத்தை பொதுமக்கள் எடுத்து சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு வந்த வங்கி ஊழியர்கள் இது குறித்து விசாரித்து ஏடிஎம்மில் பணம் எடுத்துச் சென்ற வாடிக்கையாளர் தொடர்பு கொண்டு வங்கி நிர்வாகம் பணத்தை திருப்பி வாங்கி உள்ளது.வாடிக்கையாளர்கள் பணத்தை கொடுக்கும்போது இது இது வங்கியின் தவறுதானே..எங்களுடைய தவறு இல்லை என விவாதம் செய்துள்ளனர்.

மேலும் இரண்டு வாடிக்கையாளர்கள் மட்டும் ரூ. 65 ஆயிரம் எடுத்து சென்ற நிலையில் வங்கி ஊழியர்கள் அந்த வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்க காவல்துறை உதவியை நாடினர். பின்னர் காவல்துறை அந்த வாடிக்கையாளரை கண்டுபிடித்து பேச்சுவார்த்தை நடத்தி பணத்தைவங்கி ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த கனரா ஏடிஎம்மில் பணம் நிரப்பிய நிறுவனம் ரூ.100 ரூபாய் நோட்டுகள் வைக்க வேண்டிய இடத்தில் ரூ.500 நோட்டுகளை வைத்துள்ளது.இதனால் தான் இதுபோன்ற தவறு நடந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

Published by
murugan

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

5 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

6 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

6 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

7 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

7 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago