சேது சமுத்திர திட்டம்.. மதுரை எய்ம்ஸ்.. மணிப்பூர் வன்முறை… நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு சரமாரி கேள்வி.!

Published by
மணிகண்டன்

நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், இன்று எதிர்கட்சியினர்களால் கொண்டுவரப்பட்ட மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தின் மீது எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்துக்களை, குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். தற்போது திமுக எம்பி டி.ஆர்.பாலு மக்களவையில் பேசினார்.

அவர் கூறுகையில் , பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குறிப்பிட்டார். வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரித்துள்ளது. பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒவ்வொரு தனிநபரின் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என கூறினீர்கள் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போதெல்லாம் திருக்குறள் சொல்கிறார் . ஆனால், தமிழகத்திற்கு தேவையானதை செய்யவில்லை. மதுரை எய்ம்ஸ்க்கு பணம் ஜப்பானிலிருந்து வருகிறது என்கிறார்கள். இன்னும் மதுரை எய்ம்ஸ் கட்டடம் துவங்கிப்படவில்லை.

சேது சமுத்திர திட்டம் என்ன ஆனது.? மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி – சோனியா காந்தி தொடங்கி வைத்த திட்டம் என்பதால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து குறைந்த விளக்கு குருடாயில் எனப்படும் பெட்ரோல் டீசல் மூல பொருள் எண்ணையை வாங்கி அதன் மூலம் விற்கப்படும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து காணப்படுகிறது.

மணிப்பூர் கலவரம் 3 மாதங்களாக தொடர்கிறது. அங்கு 143 மக்கள் இறந்துள்ளார். ஆயிரக்கணக்கனோர் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுளள்னர். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை முன்னெடுக்கவில்லை என திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

13 minutes ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

33 minutes ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

51 minutes ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

2 hours ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

2 hours ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

4 hours ago