Categories: இந்தியா

பாலியல் குற்றவாளிகள் அரசு வேலையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்..! ராஜஸ்தான் முதல்வர்

Published by
செந்தில்குமார்

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அரசு வேலைகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நேற்று இரவு முதலமைச்சரின் இல்லத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக நடந்த மறுஆய்வுக் கூட்டத்தின் போது, ​​பெண்கள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு எதிரான குற்றங்களை தடுப்பதே எங்களது முதன்மையான பணியாகும். பாலியல் குற்றவாளிகளின் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும் என்று அசோக் கெலாட் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

அவர்களின் குணநலச் சான்றிதழில் அவர்களின் குற்றத்தைக் குறிப்பிட வேண்டும் என்று கூறியதோடு, இதுபோன்ற வழக்குகளுடன் அவர்கள் வேலைக்கு விண்ணப்பித்தால், அத்தகைய நபர்களின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். என்றும் கூறியுள்ளார்.

மேலும், அத்தகைய குற்றவாளிகளுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் கூறினார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் தமிழர்கள்.! யார் அந்த இருவர்?

டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…

1 hour ago

“படம் வந்ததே நிறைய பேருக்கு தெரில.. எங்க மேலதான் தப்பு”- விஜய் சேதுபதி வருத்தம்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…

2 hours ago

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னவெல்லாம் வலியுறுத்தினார்.?

டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…

3 hours ago

BSF வீரர்கள் சொல்ல சொல்ல கேட்கல.., எல்லை தாண்டிய பாக். நபர் சுட்டுக்கொலை.!

குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…

3 hours ago

டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்..! இந்திய அணி Squad இதுதான்!

டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…

6 hours ago

”ED அல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம்” – முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…

6 hours ago