2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டையே உலுக்கிய மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் வன்கொடுமை செய்யப்பட்டு டெல்லி சாலையில் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி மருத்துவ தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த கோர சம்பவத்தை நிகழ்த்திய ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான்.
அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதன் பின் குற்றவாளிகள் 4-பேருக்கும் தூக்கு தண்டனையை காலதாமதம்படுத்த ஒருவர் ஒருவராக சீராய்வு மனுகள் , கருணை மனு ஆகியவை தாக்கல் செய்தனர்.
இதனால் மூன்று முறை தூக்கு தண்டனை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று காலை 05.30 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளுக்கு சற்று முன் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…