இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் நாடு முழுவதும் இரவு ,பகல் என்று பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் எஸ்.ஐ ஆக உள்ளவர் சாந்தாராம். இவர் விஜயவாடாவில் தொடர்ந்து ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவரது தாய் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
எஸ்.ஐ சாந்தாராமுவிற்கு அதிகாரிகள் விடுமுறை கொடுத்ததும் விடுமுறை வேண்டாம் என கூறிய தாயின் இறுதிச்சடங்கை வீடியோவில் பார்த்து அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து சாந்தாராம் கூறுகையில் , எனது தாய் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நான் நான்கு மாவட்டங்களையும் ,45 சோதனை சாவடிகளை கடந்து செல்ல வேண்டும்.
இதனால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. இங்கிருந்து நான் வந்த பிறகு 18 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் இதனால் எனது பணியை நான் செய்ய முடியாத நிலை ஏற்படும் என கூறினார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…