இடைத்தேர்தலில் தோல்வி எதிரொலி – பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா

Published by
Venu
  • கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ளது.
  • கர்நாடக இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்றது. மீதம் உள்ள இரண்டு தொகுதிகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.

இன்று கர்நாடகாவில் 15 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றது.இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாஜக அபார வெற்றிபெற்றது.காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்த 15 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் கர்நாடக சட்டப்பேரவை தொகுதிகள் 222 ஆக அதிகரித்துள்ளது. இதனால், அங்கு பெரும்பான்மை நிரூபிக்க 112 தொகுதிகளை தன்வசம் வைத்திருக்க வேண்டும் .இந்த 15 தொகுதிகளில் 6 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலையில் பாஜக 12 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதனால் எடியூரப்பா அரசுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

இந்த நிலையில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார்.

Recent Posts

கைதி 2 எப்போது ஸ்டார்ட்? எஸ்.ஆர். பிரபு சொன்ன முக்கிய தகவல்!

சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…

12 hours ago

இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! ரெட் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…

12 hours ago

“மூன்றாம் உலகப்போர்”..இது டிரம்பிற்கு புரியும்! எச்சரிக்கை கொடுத்த முன்னாள் ரஷ்ய அதிபர்!

ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…

14 hours ago

பொள்ளாச்சி வழக்கு 6.5 ஆண்டுகள்…ஞானசேகரன் வழக்கில் 157 நாளில்..இபிஸ்க்கு கனிமொழி பதிலடி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

14 hours ago

என்ன மனுஷன்யா! “அவுட் வேண்டாம்”…பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…

17 hours ago

தீர்ப்பு வரவேற்கத்தக்கது! யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? இபிஎஸ் கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…

18 hours ago