நாடு முழுவதும் தற்போது வரையில் என்பது 88.5 லட்சம் பேருக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கும் விதமாகவும் இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் அவசரகால அனுமதி பெற்று கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை 88.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செவ்வாய்க்கிழமை மட்டும் மாலை 6 மணி வரை 1,90,665 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், மொத்தம் இதுவரை 88,57,341 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சுகாதார பணியாளர்கள் 61,29,745 பேருக்கு முதல் முறையாகவும், 2,16,339 பேருக்கு இரண்டாம் முறையாகவும் கொரோனா தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…