கேரளாவில் சோகம்..! தந்தையின் இறுதிச்சடங்கை வீடியோ கால் மூலமாக பார்த்த மகன்..!

Published by
murugan

கேரளா மாநிலத்தை சார்ந்த லினோ அபெல்(30) இவர் கத்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவரது தந்தை கட்டிலிருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தனது தந்தையை பார்ப்பதற்காக லினோ அபெல் கடந்த 8-ம் தேதி  அவசரமாக கேரளாவிற்கு திரும்பினார்.

இந்நிலையில் கொரோனா காரணமாக இந்தியா முழுதும் அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதனை செய்து வருகின்றனர். இதையெடுத்து லினோ அபெல் விமான நிலையம் வந்து இறங்கியவுடன் லேசான இருமல் இருந்ததால் தானாகவே சென்று மருத்துவர்களிடம் அணுகி இருமல் இருப்பதாக கூறினார்.

இதையடுத்து கோட்டயம்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தனி படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .  அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று லினோ அபெல் தந்தை உடல்நலம் மோசமாக நிலையில் கடந்த 9-ம் தேதி உயிரிழந்தார். 

ஒரே மருத்துவமனையில் இருந்தாலும் லினோ அபெல்  கொரோனா அறிகுறியால்  தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் தனது தந்தை உடலை பார்க்க அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து மருத்துவமனையில் தந்தையின் உடல் ஆம்புலன்ஸில் செல்வதே ஜன்னல் வழியாக பார்த்து கண்ணீர் வடித்தார்.

 பின்னர் மொபைலில் வீடியோ கால் மூலமாக தனது தந்தையின் இறுதிச் சடங்கை பார்த்து  துடித்தார். இதையடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்ட லினோ அபெல்,  விமான நிலையத்தில் தானாக முன்வந்து மருத்துவரை அணுகினேன் அதுவே நான் மட்டும்  மருத்துவரை அணுகாமல் இருந்திருந்தால் எனது தந்தை ஒரு முறையாவது பார்த்திருப்பேன் எனக் கூறினார்.

ஆனால் அவ்வாறு நான்  செய்யவில்லை. காரணம்  கொரோனா  வைரஸ் என்னைத் தாக்கி இருந்தால்  மற்றவர்களுக்கும் பரவிவிடும் என்ற காரணத்தால் தான் நான் மருத்துமனையில் சேர்ந்தேன். எனவே வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தயங்காமல் மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Published by
murugan

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

2 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

3 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

5 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

6 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

7 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

7 hours ago