இந்தியாவில் கூடுதலாக மேலும் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது உள்ள 230 ரயில்களுக்கு கூடுதலாக 80 புதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே தலைவர் நேற்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், தேர்வு மற்றும் பிற முக்கிய காரணங்களுக்காக இந்திய மாநிலங்களின் தேவையைப் பொறுத்து ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் பயணிகள் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து இந்திய ரயில்வே இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், மத்திய அரசு, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதில் மெட்ரோ ரயில் சேவைகளுக்கு அனுமதி வழங்கிய நிலையில், ஒருசில மாநிலங்களில் பயணிகள் ரயில் சேவைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சிறப்பு ரயில்களை ரயில்வே வாரியம் இயக்கி வருகிறது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 80 சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்தார். அதற்கான முன்பதிவு, வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…