பீகாரைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., மகேந்திர பிரசாத் டெல்லியில் உடல்நலக்குறைவால் காலமானார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்பி மகேந்திர பிரசாத் (81 வயது) நீண்ட நாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். எம்பி மகேந்திர பிரசாத் 1985 முதல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர். முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் அதன் பிறகு ஜனதா தளத்தில் இணைந்தார்.
பின்னர், லலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு மகேந்திரா நியமிக்கப்பட்டார். இதையடுத்து பீகாரில் ஆர்ஜேடி ஆட்சியை இழந்தபோது, மகேந்திர பிரசாத் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவரை ராஜ்யசபாவுக்கு தொடர்ந்து மூன்று முறை எம்பியாக நியமிக்கப்பட்டார்.
ராஜ்யசபாவில் அவருக்கு இன்னும் இரண்டாண்டு பதவி காலம் இருந்தது. இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் எம்பி மகேந்திர பிரசாத் மறைவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றன. மகேந்திரனின் மறைவால் அரசியல் மற்றும் தொழில்துறையில் உலகம் ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்தித்துள்ளது என்று நிதிஷ்குமார் கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…