பீகாரைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., மகேந்திர பிரசாத் டெல்லியில் உடல்நலக்குறைவால் காலமானார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்பி மகேந்திர பிரசாத் (81 வயது) நீண்ட நாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். எம்பி மகேந்திர பிரசாத் 1985 முதல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர். முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் அதன் பிறகு ஜனதா தளத்தில் இணைந்தார்.
பின்னர், லலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு மகேந்திரா நியமிக்கப்பட்டார். இதையடுத்து பீகாரில் ஆர்ஜேடி ஆட்சியை இழந்தபோது, மகேந்திர பிரசாத் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவரை ராஜ்யசபாவுக்கு தொடர்ந்து மூன்று முறை எம்பியாக நியமிக்கப்பட்டார்.
ராஜ்யசபாவில் அவருக்கு இன்னும் இரண்டாண்டு பதவி காலம் இருந்தது. இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் எம்பி மகேந்திர பிரசாத் மறைவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றன. மகேந்திரனின் மறைவால் அரசியல் மற்றும் தொழில்துறையில் உலகம் ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்தித்துள்ளது என்று நிதிஷ்குமார் கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…