மாநிலங்களின் கையிருப்பில் 2.28 கோடி தடுப்பூசி உள்ளது – மத்திய சுகாதாரத்துறை!

Published by
Rebekal

மாநிலங்களின் கையிருப்பில் 2.28 கோடி கொரோனா தடுப்பூசி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது சில பகுதிகளில் குறைந்து இருந்தாலும், பல இடங்களில் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. எனவே, கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்காக மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மாநிலங்களின் கையிருப்பில் 2.28 கோடி தடுப்பூசி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 45,73,30,110 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 43,80,46,844 தடுப்பூசிகளை மாநிலங்கள் உபயோகித்து உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தற்பொழுது மாநிலங்களின் கையிருப்பில் 2,28,27,959 தடுப்பூசிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மத்திய அரசு தரப்பில் இருந்து கூடுதலாக 24,11,000 தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு கூடுதலாக அனுப்பப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளில் இதுவரை 44.19 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

8 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago