Categories: இந்தியா

சிறுவனை தாக்கிய தெருநாய்கள் ..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி!!

Published by
அகில் R

தெலுங்கானா : சமீபத்தில் அதிகமாக தெருநாய்கள் தாக்கிய செய்திகள் கேட்பதோடு வீடியோ கட்சிகளும் வெளியாகி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அதே போல ஒரு சம்பவம் தற்போது ஹைதராபாத்தில் உள்ள சங்கரெட்டியில் இருக்கும் ஸ்ரீநகர் காலனியில் எனும் இடத்தில் ஒரு சிறுவனை 6 தெரு நாய்கள் சுற்றி வளைத்து தாக்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது சம்மந்தமான காட்சிகள் அருகில் இருந்த வீட்டின் கேமராவில் பதிவாகி உள்ளது. அது வீடியோவாக தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், “அச்சிறுவனை 6 தெருநாய்கள் சுற்றி வளைத்து தாக்கும், நீண்ட நொடிகளுக்கு பிறகு வீட்டில் இருந்து வெளிய வந்தவரை கண்டவுடன் அந்த தாக்குதலை நிறுத்தி விட்டு அந்த நாய்கள் அங்கிருந்து ஓடிவிடும்”.  இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இதனால் காயம் ஏற்பட்ட அந்த சிறுவன், அரசு மருத்துவாமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கானா மாநிலத்தில் சிறு குழந்தைகள் மீது தெருநாய்கள் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகவே இருந்து வருவதை தெலுங்கானா உயர்நீதிமன்றம் தீவிரமாகக் கண்டித்ததுள்ளது.

மேலும், தெருநாய்களின் தொல்லையால் சிறுவர்கள் உயிரிழப்பது குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்ததுடன், இந்த பிரச்னைக்கு தீர்வு காண தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், இது போன்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

5 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

6 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

6 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

7 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

7 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

8 hours ago