Categories: இந்தியா

வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள்..! கிரேன் மூலம் தேர்வு மையத்திற்கு அழைத்துச்சென்ற காவல்துறை..!

Published by
செந்தில்குமார்

ஆந்திரப் பிரதேசத்தின் என்டிஆர் மாவட்டத்தின் நந்திகிராமில் முழங்கால் அளவுள்ள வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சுற்றியுள்ள கிராமங்கள் முற்றிலும் நீரில் மூழ்கின. இந்த வெள்ளத்தினால் நெடுஞ்சாலையில் கூட வாகனங்கள் ஏதும் செல்லமுடியாததால், அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத செல்ல முடியாத நிலை ஏற்பட்டது

இந்நிலையில், மாணவர்கள் செமஸ்டர் தேர்வில் கலந்து கொள்ள உதவுமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில், போலீசார் கிரேன் ஏற்பாடு செய்து, அதில் மாணவர்களை சாலையைக் கடந்து தேர்வு மையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

பிறகு, தேர்வு முடிந்து மாணவர்கள் வீடு திரும்ப போலீசாரும் உதவியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோவை ஆந்திர காவல்துறை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மேலும், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணாவின் கிளை நதியான முன்னேறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் (NH 65) போக்குவரத்து தடைபட்டது மற்றும் அருகிலுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

58 minutes ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

2 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

3 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

4 hours ago