Andhrafloods [File Image]
ஆந்திரப் பிரதேசத்தின் என்டிஆர் மாவட்டத்தின் நந்திகிராமில் முழங்கால் அளவுள்ள வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சுற்றியுள்ள கிராமங்கள் முற்றிலும் நீரில் மூழ்கின. இந்த வெள்ளத்தினால் நெடுஞ்சாலையில் கூட வாகனங்கள் ஏதும் செல்லமுடியாததால், அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத செல்ல முடியாத நிலை ஏற்பட்டது
இந்நிலையில், மாணவர்கள் செமஸ்டர் தேர்வில் கலந்து கொள்ள உதவுமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில், போலீசார் கிரேன் ஏற்பாடு செய்து, அதில் மாணவர்களை சாலையைக் கடந்து தேர்வு மையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
பிறகு, தேர்வு முடிந்து மாணவர்கள் வீடு திரும்ப போலீசாரும் உதவியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோவை ஆந்திர காவல்துறை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மேலும், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணாவின் கிளை நதியான முன்னேறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் (NH 65) போக்குவரத்து தடைபட்டது மற்றும் அருகிலுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…