இந்தியா

கேரள பள்ளியில் திடீர் துப்பாக்கி சூடு… பரபரப்பில் திருச்சூர்! நடந்தது என்ன?

Published by
பாலா கலியமூர்த்தி

கேரளா மாநிலம் திருச்சூரில் ஒரு பள்ளியில் முன்னாள் மாணவர் ஜெகன் என்பவர் திடீரென கைத்துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் திரிச்சூர் அருகே நிக்கனலில் இயங்கி வரும் விவேகோதயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர் ஒருவர் தனது பள்ளி வகுப்பறைக்கு சென்று திடீரென துப்பாக்கியை எடுத்து மேல் நோக்கி சுட்டுள்ளார்.

இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அங்கு உயிர்சேதம் ஏதும் நல்வாய்ப்பாக ஏற்படவில்லை. பின்னர் துப்பாக்கியால் சுட்ட முன்னாள் மாணவர் ஜெகனை பொதுமக்கள் பிடித்து திருச்சூர் கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தகவலறிந்து வந்த போலீசார் அந்த முன்னாள் மாணவரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். பள்ளியில் துப்பாக்கிசூடு நடத்திய முன்னாள் மாணவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

உத்தரவை கிடப்பில் போட்ட டெல்லி அரசு.? எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம்.!

இதுதொடர்பாக பள்ளியில் இரண்டு ஆசிரியர்களை பற்றி விசாரித்தப்பின் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர், தான் படிக்கும்போது தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த தொப்பியை திருப்பி தருமாறு கோரியதாகவும், பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, முன்னாள் மாணவர் எதற்கு பள்ளிக்கு சென்று துப்பாக்கிசூடு நடத்தினார்?, அவர் மதுபோதையில் இருந்தாரா? அவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது?, எதாவது உள்நோக்கத்துடன் இந்த துப்பாக்கிசூடு நடத்தினரா? என பல்வேறு கோணங்களில் அப்பகுதி காவல் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

32 minutes ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

1 hour ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

2 hours ago

தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…

2 hours ago

ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…

3 hours ago

பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ்! எம்எல்ஏ அருளுக்கு இடம்!

திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…

4 hours ago