Supreme court of India [Image source : ANI]
சுற்றுசூழலை பாதிக்காத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கவும், விற்கவும், வெடிக்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, வெடிக்க தடை கோரி தொடர்ந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதாவது, பட்டாசுகளுக்கு தடை கோரி தொடர்ந்து வழக்குகளில் நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் அமர்வு உத்தரவிட்டது.
பேரியம் மற்றும் சரவெடி தொடர்பாக அனுமதி கோரிய மனுவை ஏற்க முடியாது என கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தடை செய்யப்பட்ட பேரியம் வேதிப்பொருளை கொண்டு பட்டாசு தயாரிக்க அனுமதிக்க கூடாது என மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், பட்டாசு வெடிப்பதற்கான முந்தைய கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் கூறியுள்ளனர். அதன்படி, பண்டிகை காலங்களில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் பட்டாசு வெடிக்கலாம் என்றும் சரவெடிக்கான தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, 2018ம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…