Supreme court of India [Image source : ANI]
சுற்றுசூழலை பாதிக்காத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கவும், விற்கவும், வெடிக்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, வெடிக்க தடை கோரி தொடர்ந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதாவது, பட்டாசுகளுக்கு தடை கோரி தொடர்ந்து வழக்குகளில் நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் அமர்வு உத்தரவிட்டது.
பேரியம் மற்றும் சரவெடி தொடர்பாக அனுமதி கோரிய மனுவை ஏற்க முடியாது என கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தடை செய்யப்பட்ட பேரியம் வேதிப்பொருளை கொண்டு பட்டாசு தயாரிக்க அனுமதிக்க கூடாது என மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், பட்டாசு வெடிப்பதற்கான முந்தைய கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் கூறியுள்ளனர். அதன்படி, பண்டிகை காலங்களில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் பட்டாசு வெடிக்கலாம் என்றும் சரவெடிக்கான தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, 2018ம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூலை 1-ஆம் தேதி முதல் மற்றும் 02-07-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும்,…
டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…