#ஆச்சிரியம்: ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த இளம் ஜோடி.!

Published by
பாலா கலியமூர்த்தி

கேரளாவில் இளம் தம்பதி முதல் பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் அனைவரிடமும் ஆச்சிரியத்தில் நிகழ்த்தியுள்ளது.

கேரளா பாலக்காடு செர்புளச்சேரி சளவற பகுதியை சேர்ந்த முஹமது முஸ்தபா அவரது மனைவி முபீனா என்ற இளம்ஜோடிகளுக்கு முதல் பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். கடந்த 16-ம் தேதி பெரிந்தல்மண்ணா மவுலானா மருத்துவமனையில் அறுவை கிசிச்சை மூலம் 4 குழந்தைகளை வெளியே எடுத்துள்ளனர். இதில் என்ன ஆச்சிரியம் என்றால் நான்கும் ஆண் குழந்தைகளாம்.

முபீனா கர்ப்பமாக இருந்தபோது, ​​அவருக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாக ஏற்கனவே மருத்துவர் தெரிவித்திருந்தனர். முதலில் ஆச்சரியப்பட்டாலும் தொடர்ந்து மருத்துவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றியுள்ளார்கள். இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளை நாடிய பிறகுதான் இந்த மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இந்த 4 குழந்தைகள் ஒவ்வொன்றும் 1,100 கிராம் முதல் 1,600 கிராம் வரை உள்ளனர்.

இந்த நான்கு குழந்தைகளும் நியோபிளேஸ் நியோனாடல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு அயான் ஆதம், ஆஸன் ஆதம், ஐசின் ஆதம் மற்றும் அஸ்வின் ஆதம் என்று பெயரிட விரும்புவதாக இளம்தம்பதிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை தலைமை ஆலோசகர் ஜெயச்சந்திரன் பராமரிப்பில் உள்ளனர். அவர் ஒரு மாதம் மருத்துவமனை கண்காணிப்பில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இளம்தம்பதிகள் ஒரே பிரசவத்தில் பெற்றேடுத்த 4 குழந்தைகளை கண்டு குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

6 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

7 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

7 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

8 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

8 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago