சிசிடிவியை பார்த்தால் உண்மை தெரியும்… ஸ்வாதி மாலிவால் பரபரப்பு.!

Published by
மணிகண்டன்

சென்னை: கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து டிவீட் செய்துள்ளார்.

கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும், மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால் வந்திருந்தார். அப்போது, அங்கிருந்த கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் , ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது டெல்லி காவல் நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்வாதி மாலிவால் தரப்பில் இருந்து எழுத்துப்பூர்வமாக புகார் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, தேசிய மகளிர் ஆணையம் இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து நடடவடிக்கை மேற்கொண்டது. முதலில் டெல்லி போலீசாருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. 3 நாளில் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று டெல்லி காவல் நிலையத்தில் ஸ்வாதி மாலிவால் நேரில் ஆஜராகி இந்த சம்பவம் தொடர்பாக தனது தரப்பு வளக்கம் அளித்தார். அதன் பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் முதன் முறையாக இந்த சம்பவம் தொடர்பாக ஸ்வாதி மாலிவால் பதிவு செய்துள்ளார்.

இதற்கிடையில், ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக கூறி, அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. மேலும், தன்னை, பிபவ் குமார் 7,8 முறை அறைந்தார் என்றும்,எட்டி உதைத்தார் என்றும், தான் வலியால் துடித்தேன் என போலீசார் விசாரணையில் தெரிவித்ததாக கூறியும் ஓர் புகைப்படமும் இணையத்தில் வைராகி வந்தது.

இந்நிலையில் தான், ஸ்வாதி மாலிவால் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில், எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. எனக்கு நடந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். கடந்த நாட்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி என்றும் பாஜகவினர் இதில் தலையிட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுளளார்.

இதனை தொடர்ந்து அவர் பதிவிட்டுள்ளதில், ட்வீட் செய்து. வீடியோக்களை வெளியிட்டால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஒருவரை மற்றொருவர் அடிப்பதை வீடியோ எடுப்பது யார்? வீடு மற்றும் அறையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தாலே அனைவருக்கும் உண்மை தெரியவரும். உன்னால் எந்த எல்லைக்கு போக முடியுமோ அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் எல்லோருடைய உண்மை முகமும் வெளிச்சத்திற்கு வரும் என பதிவிட்டுள்ளார்.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

9 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

9 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

10 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

11 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

12 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

12 hours ago