பஞ்சகுலா என்ற பகுதியில் 3 குளிர்பான பாட்டில்களுக்கு ரூ.4.5 ரூபாய் ஜிஎஸ்டி விதித்த காரணத்தால் ஸ்விக்கி நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையம் ரூ.20,000 அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி ஹரியானாவில் உள்ள பஞ்சகுலா பகுதியில் வசிக்கும் அபிஷேக் கார்க் என்பவர் ஸ்விக்கி ஆப்பிலிருந்து உணவுபொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார். அதில் அவர் சீஸி பூண்டு குச்சிகள், 500 மி.லி கொக்கோகோலாவில் 3 பாட்டில்கள் வாங்கியுள்ளார். இந்த குளிர்பானங்கள் ஒவ்வொன்றின் விலையும் எம்.ஆர்.பி படி ரூ.30 ரூபாய் மட்டுமே.
ஆனால், அந்த 3 குளிர்பானங்களுக்கு ஸ்விக்கி கூடுதலாக ரூ.4.5 ரூபாய் ஜிஎஸ்டி விதித்துள்ளது தெரியவந்துள்ளது. இவர் அந்த பில் படி ரூ.197 ரூபாய் பணமாக அளித்துள்ளார். இதனால் அபிஷேக் கார்க் இந்த செய்தியை ட்விட்டரில் பரவ செய்தார். இதனை ஸ்விக்கி நிறுவனமும் எம்.ஆர்.பி பொருளுக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளது.
இதனால் அபிஷேக் கார்க் கடந்த 2019 மே 31 ஆண்டு மாவட்ட நுகர்வோர் மன்றத்தை அணுகி புகார் அளித்துள்ளார். இந்த புகாரிலிருந்து ஸ்விக்கி தன்னை தற்காத்துக்கொள்ள உணவகங்கள் மற்றும் வணிகர்களுக்கு மத்தியில் ஊடகமாகவும், இடைத்தரகராகவும் மட்டுமே நிறுவனம் செயல்படுகிறது என்று கூறியுள்ளது. ஆனால், இதனை ஏற்க நுகர்வோர் மன்றம் மறுத்துவிட்டது.
இதனால் ஸ்விக்கி நிறுவனத்திற்கு ரூ.20,000 அபராதம் விதித்து, அதில் ரூ.10,000 ஐ ஹரியானா மாநில குழந்தைகள் நல கவுன்சிலில் டெபாசிட் செய்யப்படும் என்றும், மீத ரூ.10,000 ஐ அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் அளித்தவருக்கு அவரின் சட்ட செலவினங்களுக்காக வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும், புகார் அளித்த அபிஷேக் கார்க்கிற்கு அவர் அதிக கட்டணம் செலுத்திய தொகையை 9% வட்டியுடன் ஸ்விக்கி நிறுவனம் அவருக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…