இன்று புற்றுநோய் என்பது சர்வசாதாரணமாக மாறிவிட்டது. இந்த நோயால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கிரண்.
இவர் அங்குள்ள கல்லூரியில், இதழியல் முதலாம் ஆண்டு பயின்று வருகின்றார். இவர் புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையில், தனது தலைமுடியை மொட்டை அடித்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிக்க தானமாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து மாணவி கிரண் அவர்கள் கூறுகையில், ‘எனது பள்ளி பருவத்தில் நண்பர் ஒருவர் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் கீமோதெரபி சிகிச்சையின் போது, அவருக்கு முடி கொட்டியது. அதற்கு பின் அவர் விக் பயன்படுத்தினார்.
அப்போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணிய போது, இரண்டு வருடங்களுக்கு முன்பு சில தனியார் தொண்டு நிறுவனங்கள் மொட்டை அடித்த முடியை வாங்கி விக் தயாரிப்பதை கேள்விபட்டேன்.
அப்போது நான் பாய் கேட் வைத்திருந்தேன். இந்த தகவலை கேள்வி படத்திலிருந்து எனது முடியை நீளமாக வளர்க்க ஆரம்பித்தேன். தற்போது நான் மொட்டை அடித்து எனது முடி அனைத்தையும் விக் செய்ய தானமாக கொடுத்துள்ளேன்’ என கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…