இன்று புற்றுநோய் என்பது சர்வசாதாரணமாக மாறிவிட்டது. இந்த நோயால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கிரண்.
இவர் அங்குள்ள கல்லூரியில், இதழியல் முதலாம் ஆண்டு பயின்று வருகின்றார். இவர் புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையில், தனது தலைமுடியை மொட்டை அடித்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிக்க தானமாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து மாணவி கிரண் அவர்கள் கூறுகையில், ‘எனது பள்ளி பருவத்தில் நண்பர் ஒருவர் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் கீமோதெரபி சிகிச்சையின் போது, அவருக்கு முடி கொட்டியது. அதற்கு பின் அவர் விக் பயன்படுத்தினார்.
அப்போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணிய போது, இரண்டு வருடங்களுக்கு முன்பு சில தனியார் தொண்டு நிறுவனங்கள் மொட்டை அடித்த முடியை வாங்கி விக் தயாரிப்பதை கேள்விபட்டேன்.
அப்போது நான் பாய் கேட் வைத்திருந்தேன். இந்த தகவலை கேள்வி படத்திலிருந்து எனது முடியை நீளமாக வளர்க்க ஆரம்பித்தேன். தற்போது நான் மொட்டை அடித்து எனது முடி அனைத்தையும் விக் செய்ய தானமாக கொடுத்துள்ளேன்’ என கூறியுள்ளார்.
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…