10-ஆம் வகுப்பு மாணவனுடன் போட்டோஷூட் – ஆசிரியை சஸ்பெண்ட்!

Published by
murugan

ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகின்றன. அவை சில நேரங்களில் வேடிக்கையாகவும் சில நேரங்களில் சர்ச்சையாகவும் இருக்கும். சர்ச்சையாக வெளியாகும் புகைப்படங்கள், வீடியோக்கள்   வைரலாகி வரும் நிலையில் மக்கள் தங்கள் கோபத்தை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு பெண் ஆசிரியர், மாணவனுடன் போட்டோஷூட் நடத்திய  புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகாவில் சிந்தாமணி தாலுகாவில் உள்ள முருகமல்ல கிராமத்தில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் தலைமையாசிரியரும், அந்த பள்ளியின் மாணவன் ஒருவரும் சிக்கபல்லாப்பூருக்கு பள்ளியில் இருந்து ஆய்வுச் சுற்றுலா சென்றபோது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மாணவன் குர்தா மற்றும் ஜீன்ஸ் அணிந்து, தலைமையாசிரியருடன் பல விதமாக  போட்டோஷூட் நடத்தி உள்ளனர். போட்டோஷூட்டின் போது, ​​மாணவன் ஆசிரியைக்கு  முத்தமிடுவது போன்றும்,  ஆசிரியை மாணவனுக்கு முத்தமிடுவது போன்றும், ஆசிரியையை மாணவன் தூக்குவது போன்றும், மாணவன் ஆசிரியரின் சேலையை பிடித்து இருப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

10 ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அந்த ஆசிரியரின் நடத்தை குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

2 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

2 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

4 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

4 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

6 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

7 hours ago