இந்தியா

தேஜ் புயல் எதிரொலி : நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Published by
பால முருகன்

வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

 ‘தேஜ்’ புயல் 

அரபிக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என்றும், வரும் 22-ஆம் தேதி (இன்று) தீவிர புயலாக உருவெடுக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே, அறிவித்திருந்தது. இந்த புயலுக்கு இந்தியா பரிந்துரைத்தபடி, ‘தேஜ்’ எனவும் பெயர் வைக்கப்பட்டு இருந்தது.

அதி தீவிர புயலாக வலு

அதன்படி, தேஜ் புயல் தற்போது தென்மேற்கு அரபி கடலில், சகோத்ரா (ஏமன்) நகருக்கு 330 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும்,  (ஓமன்) நகருக்கு 690 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் , அல் கைடா (ஏமன்) நகருக்கு 720 கி.மீ. தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது. இந்த புயல்  தற்போது அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ள காரணத்தால் தமிழகத்திலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த தேஜ் புயலானது வருகின்ற அக்-25ஆம் தேதி ஏமனின் அல் கைதா மற்றும் ஓமனின் சலாலா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

தேஜ் புயல் நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதைப்போல, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி காரணமாக  சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. 

மழைக்கு வாய்ப்பு 

 ‘தேஜ்’ புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராமநாதபுரம் நாகப்பட்டினம், தஞ்சாவூர்,  ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

அகமதாபாத் விமான விபத்து: சகோதரரின் இறுதி ஊர்வலத்தில் ரமேஷ்.., சோகக் காட்சி.!

குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…

58 minutes ago

”ரூ.3,000க்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…

2 hours ago

பாமக ஜிகே மணி.., எம்.எல்.ஏ அருள் மருத்துவமனையில் அணுமதி.!

சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…

2 hours ago

ஏர் இந்தியா விமான விபத்து: 190 பேரின் டிஎன்ஏ பொருத்தம் உறுதி!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

4 hours ago

“மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்”…தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…

5 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…

5 hours ago