பொதுவாக ஒரு ஆண் அல்லது பெண் வாக்காளர் அடையாள அட்டை பெற 18 வயது பூர்த்தி பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமேதேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையை வழங்கும்.அடையாள அட்டைபெற பிறப்பு சான்றிதழ் அல்லது ஆதார்கார்டு கொண்டு விண்ணப்பம் பூர்த்தி செய்து பின்னர் வாக்காளர் அடையாள அட்டை வாங்க முடியும்.
ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் இதற்கு தலைகீழாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் மாருதி நகர் பகுதியில் கரீம்நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் நந்திதா(3) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எல்கேஜி வருகிறார்.இந்நிலையில் நந்திதாவிற்கு தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கியுள்ளனர்.
இதில் கொடுமை என்னவென்றால் அந்த வாக்காளர் அடையாள அட்டையில் சிறுமியின் புகைப்படத்துடன் அவரது வயது 35 என குறிப்பிடப்பட்டுள்ளது.இதுவரை வாக்காளர் அட்டையில் பெயர் மாற்றம் , பெயர்களில் திருத்தம் போன்ற நடத்து இருப்பதை பார்த்து இருப்போம்.
ஆனால் இது போன்ற சம்பவம் நடந்து இருப்பது இதுவே முதல் முறை. இதைத்தொடர்ந்து நந்திதாவின் தந்தை தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு பின்னர் வாக்காளர் பட்டியலில் இருந்து நந்திதா பெயரை நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என கூறப்பட்டது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…
சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…