தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு..!

Published by
murugan

ஸ்ரீநகரில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ஜெவானில் உள்ள பந்தா சவுக்கில் ஒரு போலீஸ் பேருந்து மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேற்று மாலை 6 மணியளவில், ஜம்மு காஷ்மீர் ஆயுதப்படை காவல்துறையின் ஒன்பதாவது பட்டாலியனின் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஜெவானில் உள்ள காவல் பயிற்சி முகாம் அருகே வந்தது.

இதற்கிடையில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 14 போலீசார் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திவிட்டு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர். பின்னர், மருத்துவமனையில் இரண்டு போலீசார் உயிரிழந்தனர்.​​ காயமடைந்த 12 வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை ஒரு போலீசார் உயிரிழந்தார்.

இதனால், தற்போது 11 வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி பாராளுமன்ற கட்டிடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினரால் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Published by
murugan

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

39 minutes ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

2 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

3 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

3 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

5 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

6 hours ago