Categories: இந்தியா

சாமானிய மக்களுடனும் தொடர்பில் இருப்பதற்கான சிறந்த வழித்தடம் மன் கி பாத்..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி

Published by
செந்தில்குமார்

பிரதமர் மோடியின் மனதின் குரல் 100வது அத்தியாயம் தொடங்கியது.

பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி 100வது அத்தியாயம் வானொலியில் ஒலிபரப்பாகி வருகிறது. மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்வு மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில், சாமானிய மக்களுடனும் தொடர்பில் இருப்பதற்கான சிறந்த வழித்தடமாக மன் கி பாத் நிகழ்ச்சி இருக்கிறது என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மன் கி பாத் 100வது நிகழ்ச்சியில் பேசிய அவர், இதில் ஒவ்வொரு முறை பேசும்போதும் நாட்டு மக்களிடம் இருந்து விலகாமல் அவர்கள் உடன் இணைந்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. 100-வது அத்தியாயத்தை எட்ட உதவிய நாட்டு மக்களுக்கு எனது நன்றிகள் என குறிப்பிட்டார்.

ஐநா சபையின் தலைமையகத்திலும் இந்நிகழ்வு ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நிகழ்வுக்காக ரூ.100 நாணயமும் வெளியிடப்பட உள்ளது. மேலும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விலி பார்லே பகுதியில் நடைபெற இருக்கும் இந்த மான் கி பாத்தின் 100-வது நிகழ்ச்சில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவுள்ளார்.

பிரதமர் மோடி தொகுத்து வழங்கும் ‘மன் கி பாத்’ வானொலியில் நாட்டு மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் குறித்து உரையாற்றினார். இது முதன்முதலில் அக்டோபர் 3, 2014 அன்று தொடங்கியது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

7 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

10 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

11 hours ago