ஹைதராபாத்தில் கொரோனாவை வென்ற 110 வயது முதியவர்!

Published by
Rebekal

ஹைதராபாத்தை சேர்ந்த 110 வயது முதியவர் கொரோனாவில் இருந்து மீண்டு, இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதுடன், உயிரிழப்பும் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இளம் வயதினருக்கு கொரோனா வந்து விட்டாலே அது குறித்த அச்சத்தில் யோசித்து யோசித்து பயந்தே உயிரிழந்து விடுகிறார்கள். ஆனால்,  ஹைதராபாத்தை சேர்ந்த 110 வயதுடைய முதியவர் தற்பொழுது கொரோனாவிலிருந்து மீண்டு பிறருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளார்.

ராமானந்த தீர்த்த எனும் 110 வயது முதியவர் கடந்த 14-ம் தேதி  மருத்துவமனையில் பரிசோதனை செய்த பொழுது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 18 நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு ஆக்சிஜன் மூலம் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்துள்ளது. தற்பொழுது இவர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்த தனியார் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜாராம் அவர்கள், இன்னும் சில தினங்களில் அவர் சாதாரண படுக்கைக்கு மாற்றப்படுவார் என தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

28 minutes ago

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்! பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…

57 minutes ago

ஏர் இந்தியா விமான விபத்து : 700 கிராம் தங்கம், ரூ. 80,000 பணம் மீட்பு!

அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

2 hours ago

தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…

2 hours ago

எப்பவும் இந்த கேள்வியை கேட்காதீங்க! கூட்டணி பற்றி கேட்டதால் டென்ஷனான பிரேமலதா!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…

3 hours ago

பதற்றத்தின் உச்சியில் போர்…”ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது” ஜி7 நாடுகள் முடிவு!

கனடா :  கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…

3 hours ago