ஒடிசாவில் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் 64 வயதுடைய ஓய்வு பெற்ற வங்கியாளர் நீட் தேர்வெழுதி மருத்துவ மாணவராக முதல் ஆண்டு சேர்ந்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜெய் கிஷோர் பிரதான் என்பவர் மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டு தனது 64வது வயதில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். கேட்பதற்கு வியப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை, ஜெய் கிஷோருக்கு 64 வயதாகிறது. இவர் எஸ்பிஐ வங்கியின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி. இவர் ஊனமுற்றோர் இட ஒதுக்கீடு பிரிவில் அரசு நடதத்க்கூடிய சுரேந்திர சாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்று முதல் வருட மருத்துவ மாணவராக சேர்க்கை பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தான் உயிருடன் இருக்கும் வரை மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். நாட்டின் மருத்துவ கல்வி வரலாற்றிலேயே நிகழ்ந்த அரிய நிகழ்வுகளில் ஒன்றுதான் இதுபோன்ற வயதில் மூத்த ஒருவர் மருத்துவ மாணவராக சேர்க்கை பெறுவது என அப்பல்கலைக்கழகத்தின் இயக்குனர் அவர்கள் கூறியுள்ளார். அண்மையில் அவரது மகள்களில் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் மரணமடைந்தது தான் அவர் நீட் தேர்வு எழுதி மருத்துவராக உருவாகுவதற்கான ஆசையை தூண்டி இருக்கும் எனவும் அருகில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…