அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் இன்று இரவு 9 மணிக்கு மத்திய அமைச்சரவை செயலர் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாடுமுழுவதும் 3-ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடையும் நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு (அதாவது மே 31 ஆம் தேதி வரை ) நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்திற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், உள்துறை அமைச்சகம் அளிக்கக்கூடிய வழிகாட்டுதல் குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் இன்று இரவு 9 மணிக்கு மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கவ்பா ஆலோசனை நடத்த உள்ளார். மாநில உள்துறை, சுகாதாரத்துறை செயலர்கள், டிஜிபிக்கள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.
இந்த நான்காவது கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…