குஜராத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி மன்ற வாக்கெடுப்புகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது.
ஆளும் பாஜக அனைத்து 31 மாவட்ட பஞ்சாயத்துகளையும் வென்றுள்ளது.மேலும், 81 நகராட்சிகளில் 70 யையும் , மற்றும் 231 தாலுகா பஞ்சாயத்துகளில் காங்கிரஸை விட மிகவும் முன்னிலையில் பெற்றுள்ளது. மொத்தம் 8,474 இடங்களில் 6,110 இடங்களை பாஜக வென்றுள்ளது.
காங்கிரஸ் 1,768 இடங்களை மட்டுமே பெற முடியும் என்ற எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளது.மேலும் மூன்று நகராட்சிகளை மட்டுமே வென்றுள்ளது, ஆனால் எந்த மாவட்ட பஞ்சாயத்திலும் காங்கிரஸால் கணக்கு திறக்க முடியவில்லை.
இதனால் குஜராத் காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில் தேர்தல் முடிவுகள் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறாக வந்துள்ளது.
எங்கள் பிரச்சாரத்தின்போது மக்களிடமிருந்து எங்களுக்கு நல்ல ஆதரவுகள் கிடைத்தன, ஆனால் முடிவுகள் அதைப் பிரதிபலிக்கவில்லை. மக்கள் ஈ.வி.எம் மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர், இந்த விஷயங்கள் அனைத்தும் ஆராயப்பட வேண்டும்” என்று சவ்தா கூறினார்.
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…