பாஜக என்.ஆர் காங்கிரஸ் உடனான கூட்டணியில் தான் உள்ளது – நிர்மல் குமார்

Published by
Dinasuvadu desk

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் புதுச்சேரி பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சந்தித்து பேசினார். என்.ஆர் காங்கிரஸ் தனித்து போட்டியிட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிர்மல் குமார் நாங்கள் என்.ஆர் காங்கிரஸ் உடனான  கூட்டணியில் தான் உள்ளோம்.இது வழக்கமான பேச்சுவார்த்தை தான் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றார்.

இன்று காலையில் புதுச்சேரியில் காங்கிரஸிலிருந்து விலகி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி, வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து நிர்மல் குமார் சந்தித்திருப்பது ரங்கசாமியை சற்று சமாதானப்படுத்தும் வகையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இந்த அதிருப்பிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரியில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

10 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

11 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

12 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

14 hours ago