இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கொடுப்பதில் உணர்வுப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது – மத்திய அரசு!

Published by
Rebekal

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கொடுப்பதில் உணர்வுப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது என மத்திய அரசு மதுரைக்கிளையில் வாதம் செய்துள்ளது.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பலர் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2009 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2019 ஆம் ஆண்டு மனுதாரர் அனைவரும் குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும், இந்த விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு தாமதமின்றி அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

அதே சமயம் இந்த உத்தரவை முறையாக நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் அதிகாரிகள் மீது தாக்கல் செய்யப்பட்டு அதுவும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு எதிர் மனுதாரராக இருக்கக்கூடிய இலங்கை அகதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி துரைசாமி அவர்கள் அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது மத்திய அரசு தரப்பில், இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். எனவே குடியுரிமை வழங்கும் விஷயத்தில் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க முடியாது. சட்டத்துக்கு உட்பட்டே முடிவு எடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், தமிழக அரசு எதிர் மனுதாரர்களாகிய இலங்கை அகதிகளுக்கு அனுப்பிய நோட்டீஸ் சரியாக சென்று சேரவில்லை எனவும், தமிழக அரசு மீண்டும் எதிர் மனுதாரர்களாகிய இலங்கை அகதிகளுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்பி, பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம் என கூறி இந்த வழக்கை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago