2 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு கோவாக்சின் பரிசோதனை; பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி..!

Published by
Edison

2 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு கோவாக்சின் பரிசோதனை செய்ய பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் முதற்கட்டமாக,முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதனையடுத்து,கடந்த மே மாதம் 1 ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்தப் பணியில்,கோவாக்சின்,கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில்,கொரோனா மூன்றாவது அலையானது குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால்,2 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி மருந்தினை பரிசோதிப்பது குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது.

இதனையடுத்து,2 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை நடத்த பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்த பரிசோதனைகள் டெல்லி,பாட்னா,நாக்பூர் உள்ளிட்ட 525 இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ)  கூறுகையில்,”விரிவான ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகளுக்குப்பின்,2 வயது முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பு மருந்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை நடத்திக் கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மருத்துவ நிபுணர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளது.எனினும்,இரண்டாம் கட்ட பரிசோதனை அறி்க்கையை சமர்பித்த பின்னரே மூன்றாம் கட்ட பரிசோதனையை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது”, எனத் தெரிவித்துள்ளன.

Recent Posts

நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி.!

நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி.!

சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…

25 minutes ago

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

3 hours ago

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.  இன்று (ஜூலை 7,…

3 hours ago

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

4 hours ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

4 hours ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

5 hours ago