Union minister Smriti Irani [Image Source: ANI]
2022-2023 நிதியாண்டில் சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியை மத்திய அரசு 38 சதவீதம் குறைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை கேட்கும் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் அதற்கான பதிலை எழுத்து பூர்வமாக அளிப்பார்கள்.
அதன்படி, சிறுபான்மையினர் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி விவரம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் கூறியுள்ளார்.
அதில், நடப்பாண்டில் சிறுபான்மையினர் நலனுக்காக 3,097 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளார் . ஆனால் கடந்த 2022-2023 ஆம் நிதியாண்டில் 5,020 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு 38 சதவீதம் குறைவாக சிறுபான்மையினர் நலன் மேம்பாட்டு நிதி குறைக்கப்பட்டுள்ளது மத்திய அமைச்சர் அளித்த தகவலின் பெயரில் தெரியவந்துள்ளது.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…