மணிப்பூர் கலவரம்… பிரதமர் இல்லாத அனைத்துக்கட்சி கூட்டம்.! காங்கிரஸ் கடும் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

மணிப்பூர் கலவரம் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்ட பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி கலந்துகொள்ளாதது குறித்து காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் இரு பிரிவினருடைய ஏற்பட்ட கலவரமானது இன்னும் நீண்டு கொண்டிருக்கிறது. இதனால் 90க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிர கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். பலர் தங்கள் சொந்த வீடுகளை விட்டு அகதிகளாக பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்து உள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஏற்கனவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலவரத்தில் ஈடுபடும் இரு பிரிவினரனரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்து இருந்தார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து வரும் 24ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தங்கள் விமர்சனத்தை முன் வைத்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் , மணிப்பூர் மாநிலம் 50 நாட்களாக பற்றி எரிகிறது. ஆனால் பிரதமர் அமைதியாக இருந்தார். பிரதமரே நாட்டில் இல்லாத போது அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டம் பிரதமருக்கு முக்கியமில்லை என்பது தெளிவாகிறது என டிவிட் மூலம் விமர்சனம் செய்துள்ளார்.

அதே போல, காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் தனது டுவிட்டர் பதிவில், மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டு 50 நாட்கள் கடந்த பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது மிகவும் தாமதமான முடிவு. இது குறித்து பிரதமரிடம் பல்வேறு பிரதிநிதிகள் பேசுவதற்கு நேரம் கேட்டும் அவர் நேரம் ஒதுக்கவில்லை. இவ்வளவு பெரிய கலவரம் நடந்தும் இன்னும் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது என விமர்சனம் செய்து இருந்தார்.

அடுத்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய்சிங் கூறுகையில், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலம் கலவரத்தில் இருக்கும் போது பிரதமர் வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார் என விமர்சனம் செய்திருந்தார். மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில், மணிப்பூர் கலவரம் நடந்து கொண்டிருக்கும் போது பிரதமர் மோடி ஐநாவில் யோகாசனம் செய்து கொண்டிருக்கிறார். இது ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பீடில் வாசித்ததை போல் உள்ளது என விமர்சனம் செய்து இருந்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

7 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

8 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

8 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

8 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

9 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

9 hours ago