மகாராஷ்டிராவில் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாளை பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது.
அண்மையில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.
இது தொடர்பாக, எதிர்ப்புத் தெரிவித்து நாளை மாலை 4 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் விவசாயிகளை காப்பாற்ற பேரணிகள் நடத்த அம்மாநில காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த பேரணியானது, மகாராஷ்டிரா மாநிலத்தின் சங்கம்னர், கோலாப்பூர், அவுரங்காபாத், அமராவதி, நாக்பூர் போன்ற நகர மையங்களிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் விவசாயிகளுக்கு நல்லதல்ல. மேலும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஒரு சிலருக்கு இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் வருவாய் அமைச்சர் பாலாசாகேப் தோரத் கூறினார்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் இணைய வசதியுடன் கிராமங்களுக்குச் செல்வார்கள். கிராமங்களில் ஒரே இடத்தில் விவசாயிகள் ஒன்று சேரும் பேரணிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…