சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்படும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உருவாகி தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியா முழுவதிலும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களிலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான மருத்துவ வசதி மற்றும் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மாநில அரசுகள் திணறி வருகிறது.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்திலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனவால் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். ஒரு நாளுக்கு நூற்றுக்கும் அதிகமானோர் அம்மாநிலத்தில் உயிரிழந்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்களை எடுத்து செல்வதற்கான வசதிகள் கூட அங்கு குறைவாக உள்ளது.
எனவே, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குப்பை வண்டியில் வைத்து மயானம் வரை கொண்டு செல்லப்படும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களில் பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்த மாநகராட்சி ஊழியர்கள், உயிரிழந்த நோயாளிகளை குப்பை அள்ளும் வாகனத்தில் எடுத்து செல்லும் காட்சிகள் உள்ளது. இந்த புகைப்படங்கள் குறித்து தலைமை சுகாதார அதிகாரி, நகர பஞ்சாயத்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…