புதுவையில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!

Published by
Rebekal

புதுவையில் ஜூன் 30ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், பல மாநிலங்களில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் புதுச்சேரியிலும் கொரோனா வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஜூன் 14ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமக்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தற்போது புதுச்சேரி அரசு மேலும் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதி வரை நீடித்துள்ளது.

இதன்படி திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு 100 பேருடன் நடத்தி கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் உட்பட்ட அனைத்து கடைகளும் காலை 5 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்கா காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும், பொது போக்குவரத்து காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தனியார் அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தியேட்டர்கள் திறக்க அனுமதி கொடுக்கப்படவில்லை.

Published by
Rebekal

Recent Posts

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…

7 minutes ago

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

42 minutes ago

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…

1 hour ago

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…

2 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…

3 hours ago