மத்திய அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு.பின்னர் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஏற்கனவே இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் என பலவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொக்ரியால் கொரோனா பாதிப்பை பொறுத்து ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார். ஊரடங்கு முடிந்ததும் நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்த திட்டம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…