டெல்லி:இ-சைக்கிள் வாங்கும் முதல் 10,000 பேருக்கு தலா ரூ.5,500 மானியமாக வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவிப்பு.
இ-சைக்கிள் வாங்கும் முதல் 1000 பேருக்கு 7500 மானியம் மற்றும் முதல் 10,000 பேருக்கு தலா ரூ.5,500 மானியமாக வழங்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் தெரிவித்துள்ளார்.மேலும்,பயணிகள் இ-சைக்கிள்களை வாங்கும் முதல் 1,000 பேருக்கும் ரூ.2,000 கூடுதல் மானியம் வழங்கப்படும் என்றும் கைலாஷ் கெஹ்லோட் கூறியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து,வர்த்தக பயன்பாட்டிற்கான கனரக சரக்கு இ-சைக்கிள்கள் மற்றும் மின் வண்டிகள் வாங்குவதற்கு அரசு மானியம் வழங்கும் என்று கூறிய கைலாஷ் கெஹ்லோட்,கார்கோ இ-சைக்கிள்களை வாங்கும் முதல் 5,000 பேருக்கு தலா ரூ.15,000 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த மானியம் முன்பு இ-கார்ட்களை தனிப்பட்ட முறையில் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்டது,ஆனால் தற்போது இ-சைக்கிள்களை வாங்கும் ஒரு நிறுவனம் அல்லது கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் ரூ.30,000 மானியம் வழங்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும்,டெல்லியில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த மானியத் திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள் என்றும்,டெல்லியின் நகர சாலைகளில் தற்போது 45,900 இ-வாகனங்கள் இயங்கி வருவதாகவும்,அதில் பதிவு செய்யப்பட்ட மொத்த இ-வாகனங்களின் சதவீதம் 12 சதவீதத்தை தாண்டியுள்ளது என்றும் டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…