டெல்லி:இ-சைக்கிள் வாங்கும் முதல் 10,000 பேருக்கு தலா ரூ.5,500 மானியமாக வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவிப்பு.
இ-சைக்கிள் வாங்கும் முதல் 1000 பேருக்கு 7500 மானியம் மற்றும் முதல் 10,000 பேருக்கு தலா ரூ.5,500 மானியமாக வழங்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் தெரிவித்துள்ளார்.மேலும்,பயணிகள் இ-சைக்கிள்களை வாங்கும் முதல் 1,000 பேருக்கும் ரூ.2,000 கூடுதல் மானியம் வழங்கப்படும் என்றும் கைலாஷ் கெஹ்லோட் கூறியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து,வர்த்தக பயன்பாட்டிற்கான கனரக சரக்கு இ-சைக்கிள்கள் மற்றும் மின் வண்டிகள் வாங்குவதற்கு அரசு மானியம் வழங்கும் என்று கூறிய கைலாஷ் கெஹ்லோட்,கார்கோ இ-சைக்கிள்களை வாங்கும் முதல் 5,000 பேருக்கு தலா ரூ.15,000 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த மானியம் முன்பு இ-கார்ட்களை தனிப்பட்ட முறையில் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்டது,ஆனால் தற்போது இ-சைக்கிள்களை வாங்கும் ஒரு நிறுவனம் அல்லது கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் ரூ.30,000 மானியம் வழங்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும்,டெல்லியில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த மானியத் திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள் என்றும்,டெல்லியின் நகர சாலைகளில் தற்போது 45,900 இ-வாகனங்கள் இயங்கி வருவதாகவும்,அதில் பதிவு செய்யப்பட்ட மொத்த இ-வாகனங்களின் சதவீதம் 12 சதவீதத்தை தாண்டியுள்ளது என்றும் டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…