Categories: இந்தியா

முதல்வர் இல்லத்தில் ஆம் ஆத்மி பெண் எம்.பி தாக்கப்பட்டாரா.? டெல்லி காவல்துறைக்கு பறந்த உத்தரவு.!

Published by
மணிகண்டன்

சென்னை : ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து டெல்லி காவல்துறை விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை டெல்லி காவல்துறைக்கு தொலைபேசி அழைப்பு மூலம் ஓர் புகார் வந்துள்ளது. அதாவது, முன்னாள் டெல்லி மகளிர் ஆணைய தலைவியும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினருமான ஸ்வாதி மலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற போது கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் என்பவாரல் தாக்கப்பட்டார் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக, டெல்லி காவல்துறை நேரில் சென்று விசாரிக்கையில், ஸ்வாதி மலிவால் அப்போது அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக ஓர் உத்தரவை டெல்லி காவல்துறைக்கு பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி ஸ்வாதி மாலிவால், டெல்லி முதல்வர் இல்லத்தில் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறை உரிய விசாரணைக் குழுவை அனுப்பி நடவடிக்கை எடுக்க உறுதியளிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையை 3 நாட்களில் அறிக்கையாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் உத்தரவிட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

5 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

7 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

11 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

12 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

14 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

14 hours ago