AAP Rajya saba MP Swati Maliwal [File Image]
சென்னை : ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து டெல்லி காவல்துறை விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை டெல்லி காவல்துறைக்கு தொலைபேசி அழைப்பு மூலம் ஓர் புகார் வந்துள்ளது. அதாவது, முன்னாள் டெல்லி மகளிர் ஆணைய தலைவியும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினருமான ஸ்வாதி மலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற போது கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் என்பவாரல் தாக்கப்பட்டார் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக, டெல்லி காவல்துறை நேரில் சென்று விசாரிக்கையில், ஸ்வாதி மலிவால் அப்போது அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக ஓர் உத்தரவை டெல்லி காவல்துறைக்கு பிறப்பித்துள்ளது.
அதன்படி, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி ஸ்வாதி மாலிவால், டெல்லி முதல்வர் இல்லத்தில் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறை உரிய விசாரணைக் குழுவை அனுப்பி நடவடிக்கை எடுக்க உறுதியளிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையை 3 நாட்களில் அறிக்கையாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…
சேலம் : மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் ஜூலை 25, 2025 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும்,…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும்,…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, இன்று, நாளை (26,27) ஆகிய இரு நாட்கள் தமிழகத்திற்கு வருகை தருகிறார். இந்தப்…