இரண்டு தங்கம் சுரங்கங்கள் கண்டுபிடிப்பு.! இது கையிருப்பை விட 5 மடங்கு அதிகம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • உத்திர பிரதேசத்தில் 2 பெரிய தங்க சுரங்கங்களை புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. தங்கம் மற்றும் தாது பொருட்கள் கிடைத்தால் மாநில அரசின் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கருத்து

இந்திய புவியியல் ஆய்வு மையம் தங்க சுரங்கம் தொடர்பாக பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்தியா முழுவதும் பல சோதனைகள் மேற்கொண்டதில் தற்போது அதற்கான பலன் கிடைத்துள்ளது. உத்திர பிரதேசத்தில் உள்ள சோன்பத்ராவில் 2 பெரிய தங்க சுரங்கங்களை புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. பின்னர் இவர்களுடன் சேர்ந்து மாநில புவியியல் மற்றும் சுரங்கம் இயக்குநரகம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. அதன்படி இந்த சுரங்கங்களில் 3,350 டன் அளவுள்ள தங்க படிமங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் சோன்பாஹ்தி என்ற இடத்தில 2700 டன் தங்க படிமங்களும், ஹார்டி என்ற சுரங்கத்தில் 650 டன் தங்க படிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

தற்போது இந்தியாவின் கையிருப்பில் 626 டன் தங்கம் உள்ள நிலையில், இப்போது கிடைத்துள்ள தங்க அளவு கையிருப்பைவிட 5 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. மேலும் தங்கம் மட்டுமின்றி யுரேனியம் போன்ற தாது பொருட்களும் இருப்பதாக ஆய்வாளர்களை தகவல் தெரிவிக்கின்றனர். தங்கம் மற்றும் தாது பொருட்கள் கிடைத்தால் மாநில அரசின் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும் என்றும், மாநிலத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் இது உதவும் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே உலக நாடுகளைப் பொறுத்தவரை அமெரிக்காவிடம் 8133.5 டன் தங்கமும், ஜெர்மனியில் 3366 டன் தங்கமும், ரஷ்யாவிடம் 2541.9 டன் தங்கமும், சீனாவிடம் 1948.3 டன் தங்கமும் கையிருப்பு உள்ளன.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

2 hours ago

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.  இன்று (ஜூலை 7,…

2 hours ago

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

3 hours ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

4 hours ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

4 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

4 hours ago