போராட்டத்தில் சோமாடோ டி-சர்ட்டை எரித்த ஊழியர்.!

Published by
murugan

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15-ம் தேதி  நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதைதொடர்ந்து அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தைநடைபெற்று வருகிறது. இந்த மோதலுக்கு பின்னர், நாடு முழுவதும் சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளது. இதனால், பல இடங்களிலும் சீனப்பொருட்களை நடுவீதியில் போட்டு உடைத்தும், எரித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொல்கத்தாவின் பெஹலாவில் சீன பொருள்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், சீன பொருட்களை புறகணிப்போம் என முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சோமாடோ  நிறுவன ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்தும், சோமாடோவில் யாரும் உணவு ஆர்டர் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

அப்போது, ஒரு  ஊழியர் ஒருவர் திடீரென சோமாடோ டி-சர்ட்டை தீ வைத்து எரித்தார். அப்போது பேசிய ஒரு ஊழியர் , நாங்கள் பட்டினியாகவும் கிடக்கத் தயார். ஆனால், சீனாவிடம் நிறுவனங்களுக்கு வேலை செய்ய மாட்டோம் என கூறினார். கொரோனா வைரஸ் காரணமாக மே மாதத்தில் சோமாடோ 13% பணியாளர்களை பணிநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

கேரளா: “இனிமே பிரியாணி தான்”..சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்!

கேரளா: “இனிமே பிரியாணி தான்”..சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்!

கேரளா : மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மெனுவில் மாற்றம் செய்யப்பட்டு, முட்டை பிரியாணி இடம்பெற்றுள்ளது.…

37 minutes ago

இந்த மகுடம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்! ஆர்சிபிக்கு வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

அகமதாபாத் : எப்போது இந்த கனவு நிறைவேறும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை…

2 hours ago

“அடுத்த சீசன் கோப்பை எங்களுக்கு”…தோல்விக்கு பின் வேதனையுடன் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர்!

அகமதாபாத் : நாம ஜெயிச்சிட்டோம் மாறா என பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை வெல்லும் கனவு நேற்று நிறைவேறியது. நடப்பாண்டு…

3 hours ago

கோப்பை பெங்களூருக்கு வர வேண்டும் என்பது எனது கனவு…முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா எமோஷனல்!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள்…

3 hours ago

இன்று பள்ளி மாணவர்களுக்கு 2ஆம் கட்டமாக பரிசு வழங்குகிறார் விஜய்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த…

4 hours ago

நார்வே செஸ் : குகேஷின் ஹாட்ரிக் வெற்றிக்கு செக் வைத்த ஹிகாரு நகமுரா!

நார்வே : செஸ் 2025 தொடர் மே 26 முதல் ஜூன் 6, 2025 வரை நார்வேயின் ஸ்டாவாங்கர் (Stavanger)…

4 hours ago