மைனர் மகளை பாலியல் வன்கொடுமை செய்த 34வயதான நபரை, அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கைது செய்தனர்.
உலகம் முழுவதும் பல இடங்களில் சிறுமிகள் உட்பட பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், தற்போது மும்பையில் உள்ள புனேவில் 34 வயதான நபர் தனது மைனர் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததை அடுத்து, அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் மும்பை பிம்ப்ரி – சின்ச்வாட் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் கூற்றுப்படி, குற்றச்சாட்டப்பட்ட அந்த நபர் தனது வீட்டில் வைத்து மகளை 15 நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அது மட்டுமின்றி கடந்த வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் தனது வீட்டின் அருகிலுள்ள காலியான கியோஸ்க்கு அழைத்து சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இது குறித்து திகி காவல்நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர் தனது கார்களை பல்வேறு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு வருமானம் ஈட்டுபவர் என்றும், புகார் கொடுத்தவர் அவரது மனைவி என்றும் கூறியுள்ளார். அதனையடுத்து சனிக்கிழமையன்று குற்றச்சாட்டப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இந்திய தண்டனை சட்டமான 376,376(2) (f) பிரிவுகளின் கீழ் 3,4,7 ஆகிய பிரிவுகளையும், போக்ஸோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…