105 கி.மீ சைக்கிளில் மகனை அழைத்து சென்று படிப்பின் முக்கியதுவத்தை உணர்த்திய தந்தை!

Published by
Rebekal
தேர்வு எழுதுவதற்காக 105 கிலோமீட்டர் சைக்கிளில் மகனை வைத்து அழைத்து சென்ற தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தார் எனும் மாவட்டத்தை சேர்ந்த பேடிபூர் எனும் கிராமத்தில் வசித்து வருபவர் தான் ஷோபிராம். இவரது மகன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி கொண்டிருந்துள்ளார். ஏற்கனவே இவன் ஒரு தேர்வு எழுதி அதில் தோல்வியுற்ற நிலையில், தற்போது மத்திய பிரதேச மாநில அரசுகள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வை நடத்த ருக் ஜன நாஹி எனும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கான தேர்வு மையம் தார் எனும் நகரில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வசிக்கும் பேடிபூர் கிராமத்திலிருந்து 105 கிலோமீட்டர் தொலைவில் தார்நகர் உள்ளது. ஆனால் தற்பொழுது கொரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது, இருப்பினும் தனது மகனது படிப்பு வீணாகிவிடக் கூடாது என்பதற்காக பேடிபூர் கிராமத்திலிருந்து 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தார் நகரத்திற்கு தனது சைக்கிளில் உட்கார வைத்து அழைத்து சென்றுள்ளார் தந்தை. இதுகுறித்து அவர் கூறுகையில், ஏற்கனவே முதல் முயற்சியில் தேர்ச்சி பெற முடியாத பாடங்களை எழுதுவதற்கு அரசு இன்னொரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த கொரானா வைரஸ் சூழ்நிலை காரணமாக போக்குவரத்து வசதிகள் கிடைக்கவில்லை. அதற்காக அரசு வழங்கியுள்ள இந்த வாய்ப்பினைத் தவற விட்டிருந்தால் எனது மகனின் ஒரு வருட கல்வி ஆண்டு வீணாக போய் இருக்கும்.
எங்களிடம் பணம் வசதி, ஒரு மோட்டார் சைக்கிள் கூட கிடையாது. உதவுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் மகனின் வாழ்க்கை மேம்படுத்துவதற்கு என்னுடைய முயற்சியாக சைக்கிளில் வைத்து அவனை அழைத்து வந்தேன். இரண்டு மூன்று நாட்கள் இந்த இடத்தில தங்குவதற்கு ஏற்ற வகையில் உணவு பொருட்களை எங்களுடன் எடுத்து வந்திருக்கிறேன். திட்டமிட்டபடி தேர்வு மையத்திற்கு சென்று விட்டோம் எனவும் அவர் சந்தோசத்துடன் கூறியுள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

8 minutes ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

1 hour ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

1 hour ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

2 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

3 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

3 hours ago