105 கி.மீ சைக்கிளில் மகனை அழைத்து சென்று படிப்பின் முக்கியதுவத்தை உணர்த்திய தந்தை!

Published by
Rebekal
தேர்வு எழுதுவதற்காக 105 கிலோமீட்டர் சைக்கிளில் மகனை வைத்து அழைத்து சென்ற தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தார் எனும் மாவட்டத்தை சேர்ந்த பேடிபூர் எனும் கிராமத்தில் வசித்து வருபவர் தான் ஷோபிராம். இவரது மகன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி கொண்டிருந்துள்ளார். ஏற்கனவே இவன் ஒரு தேர்வு எழுதி அதில் தோல்வியுற்ற நிலையில், தற்போது மத்திய பிரதேச மாநில அரசுகள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வை நடத்த ருக் ஜன நாஹி எனும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கான தேர்வு மையம் தார் எனும் நகரில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வசிக்கும் பேடிபூர் கிராமத்திலிருந்து 105 கிலோமீட்டர் தொலைவில் தார்நகர் உள்ளது. ஆனால் தற்பொழுது கொரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது, இருப்பினும் தனது மகனது படிப்பு வீணாகிவிடக் கூடாது என்பதற்காக பேடிபூர் கிராமத்திலிருந்து 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தார் நகரத்திற்கு தனது சைக்கிளில் உட்கார வைத்து அழைத்து சென்றுள்ளார் தந்தை. இதுகுறித்து அவர் கூறுகையில், ஏற்கனவே முதல் முயற்சியில் தேர்ச்சி பெற முடியாத பாடங்களை எழுதுவதற்கு அரசு இன்னொரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த கொரானா வைரஸ் சூழ்நிலை காரணமாக போக்குவரத்து வசதிகள் கிடைக்கவில்லை. அதற்காக அரசு வழங்கியுள்ள இந்த வாய்ப்பினைத் தவற விட்டிருந்தால் எனது மகனின் ஒரு வருட கல்வி ஆண்டு வீணாக போய் இருக்கும்.
எங்களிடம் பணம் வசதி, ஒரு மோட்டார் சைக்கிள் கூட கிடையாது. உதவுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் மகனின் வாழ்க்கை மேம்படுத்துவதற்கு என்னுடைய முயற்சியாக சைக்கிளில் வைத்து அவனை அழைத்து வந்தேன். இரண்டு மூன்று நாட்கள் இந்த இடத்தில தங்குவதற்கு ஏற்ற வகையில் உணவு பொருட்களை எங்களுடன் எடுத்து வந்திருக்கிறேன். திட்டமிட்டபடி தேர்வு மையத்திற்கு சென்று விட்டோம் எனவும் அவர் சந்தோசத்துடன் கூறியுள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago