கொரோனா பரவலை கட்டுப்படுத்த இமாச்சல பிரதேசத்தில் இன்று முதல் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், மளிகை கடைகளுக்கும் மூன்று மணி நேரம் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக பரவி வருகிறது. எனவே கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காக மே 7ஆம் தேதி முதல் மே 17-ஆம் தேதி வரையிலும் இமாச்சல் பிரதேசத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை முதல்வர் ஜெயராம் தாகூர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் இது குறித்து பேசப்பட்டுள்ளது.
அப்பொழுது மே 10ஆம் தேதி முதல் பொது போக்குவரத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து இன்று முதல் பொது போக்குவரத்து அனைத்தும் இமாச்சல பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் அங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான மளிகை கடைகள் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே திறக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…