வாட் வரியை ஏற்றிய நாங்கள் அல்ல, அதை ஏற்றிய முட்டாள் தான் குறைக்கணும் என தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மாநில அரசுகளை கேட்கக் கூடிய அதிகாரமோ, உரிமையோ மத்திய அரசுக்கு கிடையாது என தெரிவித்துள்ளார். மேலும் வாட் வரியை கூட்டியது நாங்கள் அல்ல, வரியை ஏற்றிய முட்டாள் தான் அதைக் குறைக்கவும் வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு மறுக்கிறது. எனவே இனிமேல் விவசாயிகள் நெல் நடவு செய்யாதீர்கள் என வலியுறுத்தி உள்ளேன். மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து நெல்லை நடவு செய்யாதீர்கள் என்று நான் சொன்னதற்கு எதிராக பாஜக தலைவர்கள் போராட்டங்களை அறிவிக்கிறார்கள்.
ஆனால் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யும் வரை நானும் விடப்போவதில்லை என தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி முழுமையாக மத்திய அரசு நீக்க வேண்டும். அதுதான் நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் எங்களுக்கு எதிராக தவறான கருத்துக்களை பேசுவதை தெலுங்கானா பாஜக தலைவர் பந்தி சஞ்சய் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது நாக்கை அறுத்து விடுவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…