தேசியக் கல்விக் கொள்கையை முதலில் அமல்படுத்திய மாநிலம் கர்நாடகா – அமைச்சர்..!

Published by
Edison

தேசியக் கல்விக் கொள்கை நடப்பு ஆண்டிலேயே அமலுக்கு வருவதாக  கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வியிலும்,உயர்கல்வியிலும் சீர்திருத்தங்களை கொண்ட தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.இதனையடுத்து,அனைவருக்கும் சமமான,தரமான குறைந்த கட்டணத்தில் ஆன கல்வி கிடைப்பதை தேசிய கல்வி கொள்கை உறுதிப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக கூறியிருந்தார்.

ஆனால்,தேசிய கல்வி கொள்கையில் அதிகாரங்கள் மத்திய அரசின் வசம் உள்ளது.இதில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்று கூறி,அதனை தமிழக அரசு எதிர்த்து வருகிறது.

இந்நிலையில்,கர்நாடகாவில் தேசியக் கல்விக் கொள்கை(NEP) நடப்பு கல்வியாண்டு 2021-2022 முதல் நடைமுறைக்கு வரும் வகையில்  அமல்படுத்துவது குறித்து மாநில அரசு சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இதன்மூலம் தேசியக் கல்விக் கொள்கையை நாட்டிலேயே முதன் முதலில் அமல்படுத்திய மாநிலம் என்கிற பெயரை கர்நாடக அரசு பெற்றுள்ளது.

மேலும்,இது தொடர்பாக,மாநில உயர்கல்வி அமைச்சர் சிஎன் அஸ்வத் நாராயண் கூறுகையில்:”தேசிய கல்விக் கொள்கை -2020 அமல்படுத்த உத்தரவு பிறப்பித்த நாட்டின் முதல் மாநிலமாக கர்நாடகா உருவெடுத்துள்ளது”, என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜூலை 29 ஆம் தேதி, NEP இன் முதல் ஆண்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிமுகப்படுத்திய 3,5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான திறன் அடிப்படையிலான மதிப்பீடான கற்றல் பகுப்பாய்வுக்கான கட்டமைக்கப்பட்ட மதிப்பீடு(SAFAL) தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

3 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

4 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

5 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

6 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

7 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

8 hours ago