Categories: இந்தியா

பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றம்..! வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி..!

Published by
செந்தில்குமார்

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை நிறுவினார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் மக்களவை சபாநாயகர் மத்திய அமைச்சர்கள் ராஜா சிங் அமித்ஷா ஜெய்சங்கர் பாஜக தலைவர் கலந்து கொண்டனர்.

புதிய கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு, பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கான பூஜையை பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து பாரம்பரிய பூஜை (கணபதி ஹோமம்) நடத்தப்பட்டது. இதேபோல, அனைத்து மத குருமார்கள் வழிபாடும் நடைபெற்றது. இதனையடுத்து, ஆதீனங்கள் 21 பேரும் பிரதமர் மோடியிடம் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை வழங்கினர். பிரதமர் மோடி மரியாதை நிமித்தமாக செங்கோல் முன் விழுந்து வணங்கினார்.

இதன்பின், சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து ஆதீனங்கள் அனைவரும் வேத மந்திரங்கள் முழங்க பிரதமர் மோடி செங்கோலை எடுத்து சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் நிறுவினார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

14 minutes ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

31 minutes ago

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…

35 minutes ago

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

2 hours ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

2 hours ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

3 hours ago